Monday, 13 August 2012

நூறு நட்புக்களுடன் இருப்பதை விட 
ஆபத்தானது 
ஒரு நட்புடன் மட்டும் இருப்பது ...

இன்று நான் ..??
மழலை சொற்கேட்டும் 
மழலை சிரிப்பை பார்த்தும் 
சிரிக்க முடியாத மன நிலையில் ...
சராசரிகளிடம் இருந்து விலகி நிற்க முயல்கிறேன் .. 
ஆனாலும் சில சமயம் நானும் சரசரியாகிவிடுகிறேன் 
அழகில் அல்ல ..........
என்னை விட திறமையான பெண்களை கண்டு 
பொறாமையில் சராசரி பெண்ணாகிவிடுகிறேன்.... 
எல்லா கனவுகளும் நிறைவேறுவதில்லை 
அதற்க்கு முயற்சி எடுக்காத பட்சத்தில் ...
நம் சந்தோசத்திற்கு கொள்ளி போடவே நாம் ஒவ்வொருத்தரும் நம் கையில் எடுக்கும் ஆயுதம் 
காதல்
என்னை தவிர்க்கும் ,வெறுக்கும் உள்ளத்தை நானும் வெறுக்கவே நினைக்குறேன் 
ஆனால் தோற்று போகிறேன் 
உன்னிடம் அல்ல ....
உன் மேல் வைத்துள்ள அன்பில் ..!!!!!!!!!!!!!
உன்னையும் மனிதன் என்று நம்பினேன்
என்னை நீ கொல்ல துணிந்த ஒரு நொடிக்கு முன் வரை ,,
நீயும் நானும் நகமும் சதையும் என்பதை போல அல்ல ..
நாம் இரத்தம் ..
வெள்ளை அணுக்கள் இன்றி சிவப்பணுக்கள் கிடையாது
என்னுடன் சண்டயிட்ட பின் பேசாமலேயே இரு 
நீ பேசாமல் இருக்கும் போது நான் உன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன் ,,,
நம் இடைவெளி பொறுக்காமல் நாம் சேரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறேன் ..
இரவு பொழுதில் மயக்கத்திலும்,
பயத்திலும் இருக்கும் நமக்கு ..
பகல் பொழுது தான் தெளிவான சிந்தனையை கொடுக்கும் ..
 என்னை சிறை பிடிக்கும்
உன் கண்களுக்கு 
"ஆயுள் தண்டனை" 
அளிக்க போகிறேன் ......
ஆம் ,,
என் ஆயுள் முழுவதும் உன் கண்களுக்குள்ளேயே நான் கைதியாய் .....