Tuesday, 31 July 2012

உன் நிலையை எப்பொழுது நீ மறக்க ஆரம்பிக்கின்றாயோ 
அப்பொழுதிலிருந்து நீ காதலிக்க ஆரம்பித்து விட்டாய் ...............
எழுதப்படாத விதி :
காதலின் ஆரம்பத்தில் தேனை போல ருசி இருக்கும் ..
முடிவில் தேனீ கொட்டியதை  போல் இருக்கும் ..
ருசியை அறிந்த நீயே வலியையும் உணர வேண்டும் ...
கோவில் கொடை:
விருந்தினர் வருகை ..ஆச்சர்யம் ..சந்தோசம் ..
ஆற்றாமை ..கோபம் ..ஆர்ப்பாட்டம் ..
ஆன்மிகம் ,,, அமைதி ..
சண்டைகள் .. சகோதர பாசம் ..
கேலி கிண்டல்கள் ..
ஓடைகள் .. 
வில்லு பாட்டு ,, முளைப்பாரி .. பால்குடம் ..
பூச்சட்டி எடுத்தல் ..மது பொங்குதல் .. 
படையல் .. பூஜைகள் ..
அனைத்தும் அடங்கியது மூன்று நாட்களில் 
சிறு துளி கண்ணீருடன் பிரிந்த 
எம் உறவுகள் .....
மீண்டும் அடுத்த கொடையில் அரங்கேற்றுவோம் ..
மறக்க  நினைக்கும் போதெல்லாம் நினைவில் வந்து என்னை வதை செய்யும் உன் நினைவுகளை என்ன செய்வது..??
என் உயிர் பிரியும் போது உன் நினைவும் பிரியும் என்று சொல்கிறதோ ...!!!!
சந்தேகம் :
 பெண்களுக்கும் மட்டுமே உரித்தான குணம் அல்ல ...
ஆண்களுக்கும் உள்ள பொதுவான குணம் ...
என்னை அன்பிற்குள் சிறை வைத்து
மரண வலி தரும்  உறவு வேண்டாம் .
தாமரை இலை மேல் உள்ள நீரினை போன்ற உறவே வேண்டுகிறேன்..
சிறையில் அடைப்பது உன் கைகளானால்
  எனக்கும் சிறை செல்ல ஆசை தான் ...