Friday, 8 June 2012

பதில் சொல் காதலனே...!!


என் காதலனே ...!!

உன்னை உன் அம்மாவிற்கு பிறகு 
மனதில் நான் மானசீகமாக சுமந்தேன்...

பிற ஆண்களிடம் பேசாதே பிடிக்கவில்லை என்றாய் 
நிறுத்திவிட்டேன் ....
உன் தோழியிடம் அளவாக இரு என்றாய் 
அளவோடு பழக ஆரம்பித்தேன் அவளுடனும் ...

காதலுக்கு சம்மதம் சொல்லும் முன் 
என்னை பார்க்க தெருவில் தவம் இருப்பாய் 
தாமதமாக வந்தாலும் அசராமல் நிற்பாய்....!!

ஆனால் இன்றோ...?


முன்பெல்லாம் என்னை காதலிக்கிறாயா என்று கேட்டாய்...!!
ஆம் என்று சொல்லும் போது சந்தோசப்பட்டாய்..
இப்பொலுதெல்லாம் என்னை மட்டுமா காதலிக்குறாய்?
என்று கேட்டு ...
என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறாய்...


என்ன சொல்வதாடா என் காதலா ,.... 

என்னை டி சொல்லி அலைக்காமல்
மா என்றே அழைத்தாய்...

ஏன் என்று கேட்டதற்கு 
என் அம்மா, அப்பா , உலகமே நீ தான் என்று சொன்னாய்..

இப்பொழுது

என்னை மனிஷியாய் கூட மதிப்பது இல்லை...


என்னை அணைத்த கரம் 
இன்று 
என்னை அடிக்கின்றது .....

அதீத அன்பு என்று நினைத்தேன் .... 
ஆனால் 
கடைசியில் நீயோ 
உனக்கு என் மீது காதல் இல்லை ,
என்னை விட்டு போய்விடு என்கிறாய்....

ஐந்து வருட காதல்

ஐந்து நிமிடத்தில் தூக்கி எரிய வைத்து விட்டாயடா நீ.... 

நீயா இவ்வாறு என்று நினைக்க தோன்றுகிறது...

எங்கே போனதடா உன் காதல் ...

No comments:

Post a Comment