Friday, 13 July 2012

என்றும் நானாக 


நான் நானாக இருக்கவே ஆசை படுகிறேன்...
நான் ஒன்றும் கல் அல்ல என்னை நீ செதுக்க ..
நீயும் சிற்பி அல்லவே ..
குழந்தையும் அல்ல செய்வது புரியாமல் இருக்க..
முதலில் உன்னை நீ வழி நடத்து ..
தனியாக முடிவு எடுக்கும் திறன் என்னுள் இருக்கிறது..
எனக்கு நீ ஆலோசனை மட்டுமே கூறலாம் 
ஆனால் முடிவு என்னுடையது...
என்னையே நான் செதுக்கும் பணியில் இருக்க 
நீ ஏன் இடையூறாக வருகிறாய் ...
எதற்காகவும்., யாருக்காவும் .,
என் நிலை என்னில் இருந்து மாறாது...
என்னை மாற்றும் முயற்சில் இருந்து நீ மாறிக்கொள் ....

No comments:

Post a Comment